Friday, March 14, 2008

யானியின் இசை மந்திரம்

" நான் ஒரு வான் ஆய்வாளரிடம் பேசி கொண்டிருந்த போது , நீங்கள் உயரே பறந்து வான் வெளிக்கு செல்லும் போது உலகம் உங்களுக்கு எப்படி தோன்றியது என்று கேட்க நேர்ந்தது . அவர் சொன்ன பதில் என்னை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தியது . உலகம் அப்படியே நம் வரை படத்தில் இருப்பது போலவே காட்சி அளிகிறதது அனால் அந்த வரைபடத்தில் உள்ள எல்லை கோடுகள் காணப்பட வில்லை " . இந்த பரந்த சிந்தனையோடு தன் பரந்த விரிந்த இசையை பொழிய தொடங்குகிறார் யானி .

பியானோவில் மெலிதாக ஆரம்பித்து மெதுவாக வொயலின் இசையை கோர்த்து நாம் எத்டிர்பார்கத நேரத்தில் புல்லங்குழளால் புல்லரிக்க வைத்து அதோடு நிற்காமல் இடையில் தாலாட்டி மெல்ல மெல்ல உச்சம் எய்தி புளங்காகிதம் அடைய வைக்கிறார் . என்னே நேர்த்தி அந்த இசைய கோலத்தில் .. உலகின் எல்லா வகை இசையையும் கற்று தேர்ந்த முதிர்ச்சி , அனுபவம் அனைத்தையும் ஒரு சேர பார்க்க முடிந்தது . லண்டன் நகரில் உள்ள , உலகின் தலை சிறந்த இசை கலைஞர்கள் பணியாற்றும் ராயல் பில் ஹார்மொனிக் கலைஞர்களின் இசை அனுபவத்தையும் உணர முடிந்தது . அந்த பியானோ , வொயலின் ,செல்லோ , டிரம்பெட் , புல்லாங்குழல் போன்ற இசை கருவிகளின் உண்மையான இசையை நான் கண்டுகொண்டேன் . ஆசியாவில் இருந்து , இந்தியா ... வேண்டாம் , தமிழகத்தில் இருந்து சென்ற ஒரே இசை மேதை மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களுக்கு பணியாற்றிய பெருமை இந்த ராயல் பில் ஹார்மொனிக் , இசை குழுவிற்கு உண்டு .

வார்த்தைகள் இல்லாமல் வளரும் சுகமான கவிதை போன்ற இசை அவருடைய நச்டால்கியா பாடலில் உணரலாம் . இவருடைய பாடல்களை கேட்கும் நம் மனது எந்த நிலையில் இருந்தாலும் முடிவில் மகிழ்ச்சி அடைய போவது உறுதி . தேசிய கீதங்களை போல் உள்ள பாடல்கள் உங்கள் உற்சாகத்தை கரை புரள வைப்பது உறுதி. இவருடைய இசை , அந்த பாடல் தலைபிர்கேற்றர்போல் உங்கள் கற்பனை குதிரைகளை பறக்க வைப்பது திண்ணம் . இந்த இசை சிந்தனையின் வண்ணங்களை காட்டுகிறது . அடர்ந்த இருள் ,சிறு ஒளி கீற்றுகள் மெல்ல மெல்ல ஒளி உயிர்
பெற்று ஒரு சூரியனை பார்த்த உணர்வு , இவை அனைத்தும் கண் மூடி உணர வைக்கிறது .
யானியின் இந்த இசை மந்திரம் , தொண்ணூறு நிமிடங்கள் ஒரே இடத்தில் என் உடலை மட்டும் கட்டி போட்டு சிந்தனையை உலகெங்கும் பரவ செய்த அனுபவம் நீங்கள் அதை கேட்டால் தான் புரியும் .

இசை பற்றி யானி கூறுகையில் ...

படைப்பு வெற்றிடத்தில் இருந்து தான் தொடங்குகிறது .
இசை அமைதியில் இருந்தே பிறக்கிறது . எனக்கு முன் இருக்கும் பெரிய சவால் , என் மனதில் நான் மட்டும் கேட்க முடிந்த இசையை இவுலகம் கேட்க வேண்டும் என்பதே .

இந்த இசை மேதை வாழ்ந்த காலத்தில் நான் பிறந்தேன் என்று இளைய ராஜாவிற்கு பிறகு பெருமைப்பட வைக்கும் யானியிம் இசை உலகெங்கும் பரவட்டும் .


இன்னும் வளரும் ....

No comments: