Friday, March 14, 2008

தீச்சொட்டுகள்

தீச்சொட்டுகள்

நெரிசல் பேருந்து
இடுப்பில் குழந்தை
இருக்கைகளில் பிணங்கள்

தீராதத் தேடல்
எந்தப் பூவிலுமில்லை
தோழமை வாசம்

கசாப்புக் கடையில்
எதற்குத் தொங்குகின்றன
கருணைத் தெய்வங்கள்?

தொலைந்து போனது
அசல் வாழ்க்கை
உதாரணம் சொல்லியே.

பள்ளிக்கு விடுமுறை
சத்துணவு இல்லை
பசியில் காகங்கள்

அடுக்கிய குழந்தைகளின்
கண்ணீரில் நனைந்திருக்குமோ
நமத்தத் தீக்குச்சிகள்

வன்முறையாளன் மனைவி
பிரசவ அறை
கத்தியைத் தீட்டும் மருத்துவர்
போதிய மருந்து
காயமேதும் இல்லை
இயல்பாய் பறக்கும் பட்டாம்பூச்சி

ஊன்றிய விதை
அரும்புகளுக்காக காத்திருப்பில்
புரியும் கர்ப்பிணி தாகம்.

கருங்கல் உறுதி
கொத்தனார் வியர்வைக்கு
ஆணி இறங்காத சுவர்

இட ஒதுக்கீடு வேண்டாம் வாருங்கள் எல்லோரும்
சம்பந்திகள் ஆயிடுவோம்.

- மா. மீனாசுந்தர், மன்னார்குடி

No comments: